இலங்கையின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருந்த, அரசியல் வாதியும், சிந்தனையாளருமான மங்கள சமரவீரவையும் corona கொரோனா காவுகொண்டது. ”குழந்தைகளே, உங்கள் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் வணங்குங்கள் என சிரேஸ்ர ஊடகவியலாளர் நடராஜா குருபரன் தனது முகநுால் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்….
- Advertisement -
ஆனால், அரசியல்வாதிகளை வணங்காதீர்கள். அவர்களை நீங்கள் வழிபட தேவையில்லை.” Children, Worship your parents and teachers. But, do not worship politicians. You do not need to worship them. கூறிய மங்கள சமரவீரவும் இல்லாதவர்களின் பட்டியலில் இணைந்துகொண்டார். மங்களசமரவீரவுடனான அனுபவப் பகிர்வுகளும், அவரது அரசியல் செயற்பாடுகளுமே இன்றைய ஊடகபரப்பை, சமூக வலைத்தளப் பதிவுகளை ஆக்கிரமித்துள்ளன.
- Advertisement -
2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa) ஜனாதிபதியாக அரியாசனம் ஏறுவதற்கு காரணமாணவர்களில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் விபரீத விபத்தில் மரணித்த சிறீபதி சூரியாராட்சியும் முதன்மையானவர்கள்.