வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கிராமசேவையாளர் ஒருவர் மதுபோதையில் வந்து குழப்பத்தில் ஈடுபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- Advertisement -
தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள கிராம அலுவலர் அலுவலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரால் பொது மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
- Advertisement -
இதன்போது அந்த மண்டபத்திற்கு சென்ற குறித்த இடத்திற்கு பொறுப்பான கிராமசேவகர் நிவாரணம் வழங்கும் செயற்பாட்டிற்கு இடையூறுகளை விளைவித்துடன், மதுபோதையில் வந்து, பெண்களையும் திட்டியதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அதற்கமைய, பிரதேசசெயலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் குறித்த பகுதிக்கு வருகை தந்து நிலவரத்தை சுமூகமாக்கியதுடன் குறித்த கிராமசேவகரை அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தார்.