ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
- Advertisement -
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை கூறியுள்ளார்.
- Advertisement -
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, ரணிலின் இல்லம் என்பவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகை செய்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்தார்.
அதன் பின் ஜனாதிபதி தனது முடிவை சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.