டீசல் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று நேற்று (02) அதிகாலை விபத்துக்குள்ளானது.
- Advertisement -
இந்த விபத்து சம்பவம் ஹங்வெல்ல பூகொட வீதியில் கிரிதர நகருக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
விபத்துக்குள்ளான பவுசரில் சுமார் 13,200 லீற்றர் டீசல் இருந்ததாக கூறப்படும் அதேவேளை விபத்தில் எரிபொருள் தாங்கிக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.