யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்ம நபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.
- Advertisement -
எரிபொருள் நிலையத்திற்கருகில் எரிபொருளுக்காக காத்திருந்தபோது பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
அண்மையில் பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்ட வேண்டும் என்பது தொடர்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செயற்படாமை தொடர்பிலும் நான் அண்மையில் கருத்து தெரிவித்த நிலையில், இது திட்டமிட்டு இடம்பெற்ற தாக்குதலாக இருக்கலாமென்றாக தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் சந்தேகம் வெளியிட்டார்.