இலங்கையர் அல்லாதவர்கள், இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருட வதிவிட விசா காலம் நீடிக்கப்படவுள்ளது.இதற்கமைய, இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
- Advertisement -
நாட்டில் தற்போது ஒரு வருட காலத்துக்கு இத்தகைய விசா வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இது 5 வருட காலத்துக்குரியதாக அதிகரிக்கப்படும் எனவும், எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி திங்கட்கிமை வரை அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தம்மிக பெரேரா கூறினார்.
- Advertisement -
இதேவேளை கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒருநாள் சேவைகள் கண்டி, மாத்தறை, வவுனியாவிலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.