இலங்கையில் எற்பட்டுள்ள வெள்ளத்தினால் மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அதுதொடர்பில் உரிய மாணவர்கள் தமது பெயர்களை தங்களது கிராம உத்தியோகத்தரிடம் வழங்குமாறு புத்தளம் பிரதேச செயலகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
- Advertisement -
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கியது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சொத்துக்களுக்கும் சேதமடைந்துள்ளன.
- Advertisement -
இந்நிலையில், பாதணிகள், ஆடைகள் மற்றும் புத்தகப் பை அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் என்பன வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் அல்லது வெள்ள நீரில் மூழ்கி பழுதடைந்திருந்தால் குறித்த மாணவர்கள் தமது பெயர் விபரங்களை இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தாங்கள் வசிக்கும் கிராம உத்தியோகத்தர்களிடம் தெரியப்படுத்துமாறும் புத்தளம் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள 0768 507 508 , 0713 913 451, 0775 162 027 எனும் நிர்வாக கிராம உத்தியோகத்தரின் இலக்கத்துடனும் தொடர்புகொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.