இலங்கையின் முக்கிய நகரம் ஒன்றில் ஆடை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் பெண்கள் உடை மாற்றும் இடத்தில் கேமரா பொருத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
- Advertisement -
பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பெண்கள் ஆடைகளை கொள்வனவு செய்ய கடைகளுக்கு சென்று உடைகளை மாற்றும் போது, அது குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
- Advertisement -
அதோடு நாட்டின் முக்கியமான நகரங்களில் உள்ள பெரிய ஆடை விற்பனை நிலையங்கள் உட்பட வர்த்தக நிலையங்களில் பெண்கள் உடை மாற்றும் இடங்களில் கெமராக்களை பொருத்தி படங்களை எடுக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதுடன் இவ்வாறான பல சம்பவங்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.