மக்களுக்கு நாட்டின் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கை பழுதுப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -
நாட்டின் பொருளாதார நெருக்கடி சம்பந்தமாக சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். எமக்கு கிடைக்கும் வருமானம் சம்பளத்தை வழங்கவும் கடனை செலுத்தவும் செலவாகின்றது. எதிர்வரும் 2030ஆம், 2035ஆம் ஆண்டளவில் ஓய்வூதியத்தை செலுத்த முடியாமல் போகும். அதனை கவனத்தில் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும்.
- Advertisement -
நாடு நிறுவனங்களை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை நம்பியுள்ளது. எமது தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எப்படி இவற்றை தற்போது நிறுத்துவது. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று நிதியை பெறுங்கள். இலங்கை மத்திய வங்கியில் எதுவும் இல்லை.
மத்திய வங்கியில் பணமில்லை. இரண்டு மில்லியன் டொலர் கூட இல்லை என நான் நினைக்கின்றேன். நாம் எவ்வளவு பேசினாலும் பங்களாதேஷிடம் பணத்தை பெறுகின்றோம். இந்தியா உட்பட அங்குமிங்கும் பணத்தை பெறுவதில் பயனில்லை. இலங்கை மத்திய வங்கி சிறந்த முறையில் இருக்கின்றது என்றால், ஏன் முன்னாள் ஆளுநரை பதவியில் தக்கவைக்கவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.