யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வீடொன்றில் இருந்து முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
- Advertisement -
குறித்த முதியவர் கடந்த சில தினங்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
- Advertisement -
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை மீட்டு , பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த முதியவர் சில நாட்களுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார் எனவும் , அதனால் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாகவும் , சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , பொலிஸார் தெரிவித்தனர்.