நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 509 பேர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
- Advertisement -
அதன்படி, இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த முந்தைய 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 76,145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உள்ள 13 வீதித் தடைகளில் 2179 பேர் மற்றும் 730 வாகனங்கள் நேற்று திங்கட்கிழமை (20) சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்