ஆசிரியர்களுக்கான 5000ரூபா கொடுப்பனவு வழங்குவது குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கான ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவது குறித்த விசேட சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதன்படி, இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாடசாலை ஆசிரியர்களுக்கு மட்டும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்காக தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. இது ஓர் ஊக்குவிப்பு கொடுப்பனவு என பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சுற்று நிருபம் வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.