திருகோணமலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவில், முள்ளிப்பொத்தானை பகுதியிலேயே இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- Advertisement -
இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்றதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம் முள்ளிப் பொத்தானை சதாம் நகரைச் சேர்ந்த அலிபுல்லா – அர்ஷான் வயது 22 என பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடைய தற்கெலைக்கான காரணம் தெரியவில்லையெனவும், இது தொடர்பான மேலதிக விசாரணையை தம்பலகமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்..