மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்கத் தொலைபேசியை வழங்கியவர் யார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி குறித்த சிறைச்சாலையில் பணியாற்றும் சிறை அதிகாரியே இந்த கைபேசியை வழங்கியவர் என கண்டறியப்பட்டுள்ளது.
- Advertisement -
இதனையடுத்து அதிகாரி கொழும்பு – மகஸின் சிறைச்சாலையிலிருந்து வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிறைக் கூடத்திலிருந்து நேற்றைய தினம் கையடக்கத் தொலைபேசியொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.