பதுளை பிரதேசத்தில் லொறி ஒன்றில் அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் குறித்த வியாபாரிக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- Advertisement -
பதுளை முத்தியங்கனை ஆலயத்தின் பின்புறம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்வதாக பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு நேற்று புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் தகவல் கிடைத்தது.
- Advertisement -
இரகசிய புலனாய்வாளரைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒரு மூடை சீமெந்து ரூ .1150 / -க்கு விற்கப்பட்டமை தெரியவந்துள்ளது. குறித்த லொறியில் கிட்டத்தட்ட 600 மூடை சீமெந்து இருந்ததாகவும்,
சோதனையின் போது கிட்டத்தட்ட 400 மூடை சீமெந்து அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் லொறியின் ஓட்டுநரை நுகர்வோர் விவகார அதிகார சபை விசாரணைக்காக சிமெந்து லொறியையுடன் தடுத்து வைத்துள்ளதையடுத்து லொறியின் சாரதி மீது பதுளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.