யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கு பொலிஸார் வருவதைக் கண்டதும் மரக்கறிகளை கைவிட்டு தலை தெறிக்க ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
இன்று காலை யாழ்.திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலய சுற்றாடலில் மரக்கறி வியாபாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் அதிகளவில் அங்கு கூடுவதனை கருத்திக் கொண்ட பொலிஸார் வியாபாரிகளை வெளியேற்றியிருந்தனர்.
- Advertisement -
இந்நிலையில் மீண்டும் இன்று வியாபாரம் இடம்பெற்ற நிலையில் இன்று காலை கோப்பாய் பொலிஸார் வாகனம் அவ்விடத்திற்கு வந்தபோது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் அத்துடன் தமது வியாபார பொருட்களையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர். எனினும் பொலிசார் திரும்பி சென்ற பின்னர் வியாபாரிகள் மரக்கறி பொருட்களை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.