நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அதன்படி நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கூடவுள்ள கொவிட்−19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே, இதற்கான இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டில் கொரோனா பரவலை அடுத்து கடந்த 20ம் திகதி இரவு 10 மணிக்கு அமுல்படுத்த ஊரடங்கு, எதிர்வரும் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது