மாதாந்த பொதுசன உதவி கொடுப்பனவுகள், முதியோர் கொடுப்பனவுகள் மற்றும் ஓகஸ்ட் மாதத்திற்கான பிற பொது உதவி கொடுப்பனவுகள் நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02) செலுத்தப்படும் என தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அதன்படி, நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு நாட்களில் திறந்திருக்கும். கொடுப்பனவுகளைப் பெறும்போது சுகாதார அலுவலக முறைகளைப் பின்பற்றி, தபால் அலுவலகங்களுக்கு வந்து தொடர்புடைய உதவியைப் பெறுமாறு தபால் தலைமையகம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.