யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் பொலிஸார் திடீர் வீதிச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் , வீதிகளில் அநாவசியமாக பலர் நடமாடி திரிந்த நிலையில் , யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
- Advertisement -
அதன் போது , அநாவசியமாக வீதியில் நடமாடியோர் பலரை மறித்து சோதனைக்கு உட்படுத்தியதுடன் அவர்களின் விபரங்களை பதிந்த பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அதேவேளை , அநாவசியமாக வீதியில் நடமாடியோர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.