நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 94 பெண்களும் 120 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 30 வயதுக்கும் குறைந்த 5 பேரும், 30 முதல் 59 வயது வரையிலான 58 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 151 பேரும் உயிரிழந்துள்ளனர்.