நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 30ஆம் திகதியுடன் முடிவுறுத்தாமல் அடுத்த மாதம் 6ஆம் திகதிவரை அதாவது மேலதிகமாக ஒருவார காலத்திற்கு நீடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
- Advertisement -
இதனையடுத்து ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிக்க அரசு ஆலோசித்து வருகின்றதாக பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது.