கோவிட் வைரஸ் தொற்று காரணமாக இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த தம்பதியினர் கிரிபத்கொட பகுதியினை சேர்ந்தவர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
கோவிட் வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய கணவர் கடந்த 22 ஆம் திகதியும், 27 வயதுடைய மனைவி இன்று காலையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . குறித்த தம்பதியினருக்கு 5 வயது மகளொன்றும் உள்ள நிலையில், குழந்தை தாய் ,தந்தையை கொடிய கோவிட் தொற்றால் இழந்துள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் கோவிட் சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது.