நாடு கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அதிகபட்ச சுய கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண கேட்டுக்கொண்டார்.
- Advertisement -
கொவிட் தொற்றுநோயை அரசாங்கமும் சுகாதாரத் துறையும் தனியாக எதிர்கொள்ள முடியாது. ஊரடங்கு நீக்கப்படும்போது பொதுமக்கள் மீண்டும் கூட்டமாக கூடுவார்கள். இந்நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் கோரியுள்ளார்.