நாட்டில் உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் ரில்லியன் கணக்கான நாணயத்தை அச்சிட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.