கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் அனர்த்த நிலைமையை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து புதிய அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்த விடயத்தை கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும், விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
- Advertisement -
மேலும் தெரிவிக்கையில், கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் உடலில் இருந்து அதிகமான நீர் வெளியேறுகிறது. இதனால் உடலில் நீரிழப்பு (dehydration) நிலை ஏற்படும். இந்த அனர்த்த நிலையை தவிர்க்க கூடுதலாக நீரை பருக வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.