நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், , மத்திய நிலையங்கள் அனைத்தும் நாளையும் திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதார மத்திய நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில், மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பொருளாதார வர்த்தக நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.