ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி வழக்கில் ரிஷாத் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
- Advertisement -
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரும் விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.