நாட்டை முடக்கும்படி சமூக ரீதியில் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த போதிலும் நாட்டை மூடக்க மாட்டேன் என திடமாக கூறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படி இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்க அனுமதித்தார் என்பதன் பின்னணி தற்போது வெளிவந்துள்ளது.
- Advertisement -
எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள் என பலரும் நாட்டை ஒருவாரத்திற்காவது முடக்கும்படி கோரிக்கை விடுத்துவந்தனர். நாட்டை முடக்கமாட்டேன் என நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் அழுத்தத்திற்கு மத்தியில் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
- Advertisement -
எனினும் இறுதியில் மகாநாயக்க தேரர்கள் கடிதம் அனுப்பிவைத்ததால் 10 நாட்களுக்கு நாட்டை முடக்கஜனாதிபதி தீர்மானம் கொண்டார். மகாநாயக்க தேரர்களின் கடிதத்தின் பின்னணி பற்றி ஆராய்ந்ததில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. நாட்டை முடக்கும்படியாக எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து அந்தக் கோரிக்கையை அரசாங்கம் செய்தது போல அல்லாமல் மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தலிற்கு அமைய நாட்டை முடக்கலாம் என்று மேல் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
மகாநாயக்க தேரர்களின் கடிதத்தை தயார் செய்ய கோரிக்கை விடுக்க வேண்டும், அதற்கான முழுப்பொறுப்பையும் அரசின் சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் செய்து முடித்ததாக கூறப்படுகிறது.