நாடு பொதுமுடக்கத்திற்குச் செல்வதாக இன்று பகல் அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
- Advertisement -
குறிப்பாக கொழும்பு மற்றும் சனநெரிசல் மிகுந்த நகரங்களில் இவ்வாரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 02 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்களுடன் மக்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.