இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றபோதும் முடக்கலை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் நாட்டின் பல நகரங்களில் வர்த்தக சங்கங்களின் கோரிக்கைக்கு அமைய வர்த்தக நிலையங்கள் முட்டப்பட்டுள்ளதனால் பல நகரங்கள் வெறிசோடியுள்ளது.
- Advertisement -
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதேவேளை நாட்டை இரண்டு வாரமாவது மூடுவது பற்றி தொடர்பில் நாளை இரவு இறுதி முடிவை அரசாங்கம் எடுக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.