கொரோனா நோயாளிகளிற்கு சிசிச்சை அளிப்பதற்கு அவசியமான மருந்திற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக நோயாளிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் டோசிலிசுமாப் என்ற முக்கிய மருந்திற்கு அரச மருத்துவமனைகளில் பாரிய பற்றாக்குறை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Advertisement -
அத்துடன் ஏனைய 40 முக்கிய மருந்துகளிற்கும் பற்றாக்குறை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொவிட் நிமோனியாவினால் பாதிக்கப்படுபவர்களிற்கு பரிந்துரை செய்யப்படும் டோசிலிசுமாப் என்ற மருந்திற்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றதனால் கொவிட் நோயாளிகளின் உயிர்களிற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- Advertisement -
அத்துடன் குறிப்பிட்ட மருந்தினை பெறமுடியாத நிலையால் சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. பல அரசமருத்துவமனைகளில் டோசிலிசுமாப் மருந்து முடிவடைந்துவிட்டது, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் துறையினரிடமிருந்து அதனை பெறுவது மிகவும் கடினமான விடயமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்புகளிற்கு உள்ளான நோயாளிகளிற்கான 40 மருந்துகளையும் பெறமுடியாத நிலை காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொவிட் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு டோசிலிசுமாப் மருந்தினை பயன்படுத்துவது நோயாளிகளிற்கு நோயாளிகள் வேறுபடும் என மருத்துவநிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அந்த மருந்தினை சில நோயாளிகளிற்கு இரண்டு அல்லது மூன்று டோஸ் வழங்கவேண்டியிருக்கும் என மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மருந்தினை பெறமுடியாத நிலை காரணமாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.