சுகாதார அமைச்சினால் சற்றுமுன்னர் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, அத்தியாவசிய தேவைக்காக இன்று முதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அத்துடன், இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அனைத்து உடற்பிடிப்பு மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், உள்ளக விளையாட்டரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
மேலும் , இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடற்கரை களியாட்ட நிகழ்வுகள் என்பனவும் நடத்தப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மேலதிக வகுப்புகள் மற்றும் அறநெறி பாடசாலைகள் நடத்துவதனை நிறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வீடுகளில் எந்தவொரு ஒன்றுகூடல்களையும் நடாத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார வழிகாட்டியில் சுட்டிகாட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.