திங்கட்கிழமை முதல் 7 நாள்கள் பயணக்கட்டுப்பாடுகளை சுயமாகப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசையோ அல்லது அதிகாரிகளையோ கட்டாயப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
- Advertisement -
இலங்கையில் கோரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த நடவடிக்கைகள் எதுவும் நேற்று வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களில் சேர்க்கப்படவில்லை அவர் சுட்டிக்காட்டினார். ஊடகவியலாளர்களிடம் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்ததாவது; வரும் திங்கட்கிழமை முதல் ஏழு நாள் பயணக் கட்டுப்பாடு மூலம் கோவிட்-19 நெருக்கடியைத் தணிக்க பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும்.
- Advertisement -
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசிடமோ அல்லது அதிகாரிகளிடமோ வலியுறுத்தினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. தினசரி உயிரிழக்கும் 150 கோவிட்-19 நோயாளிகளில் பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் சக இலங்கையர்களின் குழந்தைகள் அடங்குவர்.
தற்போதைய நிலமையைக் கட்டுப்படுத்த ஒரே வழி கடுமையான பயணக் கட்டுப்பாடுகள். இலங்கையில் கோரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த புதிய வழிகாட்டுதல்கள் எதுவும் நேற்று வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களில் சேர்க்கப்படவில்லை.
மருத்துவமனைகளின் வரம்புகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களின் வசதிகள் நிரப்பப்பட்டதால் ஏற்கனவே நாட்டில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் கடுமையக்கப்பட்டு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று பலர் எதிர்பார்த்தனர். தற்போதைய நிலமையை மாற்றியமைக்க இந்த வழிகாட்டுதல்கள் போதுமானதாக இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது – என்றார்.