பிரித்தானியாவில் தொண்டையில் ரப்பர் சிக்கி 3 வயது சிறுமி பெற்றோர் முன்னிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லிவர்பூல் நகரத்தில், Aintree பகுதியில் Ormskirk சாலையில் உள்ள ASDA சூப்பர் மார்க்கெட்டில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
- Advertisement -
அங்கு, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது பெற்றோருடன் வந்த 3 வயது குழந்தை ஒன்று, திடீரென தொண்டையில் எதோ சிக்கிக்கொண்டதால் சுவாசிக்கமுடியாமல் துடுதுடித்து மயங்கியது. தகவல் கொடுக்கப்பட்ட அடுத்த 9 நிமிடங்கலில் ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. குழந்தையை Alder Hey குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
- Advertisement -
அந்தக் குழந்தை, சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் எதோ ஒரு சிறிய பொருளை விழுங்கியிருக்கலாம் என கருதப்பட்டது. அனால், குழந்தையின் தொண்டையில் அவருடைய ஜாக்கெட்டில் உள்ள ஜிப்பின் முனையில் இருக்கும் ஒரு சிறிய ரப்பர் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால், இந்த மரணத்தில் சந்தேகிக்கும் விதமாக ஏதும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் கூறினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிப்பதாக ASDA சூப்பர் மார்க்கெட் தெரிவித்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்த சிறுமிக்காக தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெறிவித்தனர்.