பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பிரித்தானிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடம் ஒரு கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
43 வயதுயடைய குறித்த நபர் இலங்கையில் சில் நாட்களாக தங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.