திடீரென நோய்வாய்ப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். ஆணமடுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த நபரே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார். நேற்றிரவு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். ஆணமடுவ வல்பாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
கடமைகளை முடித்து விட்டு வீடு சென்ற போது திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் அவரை குடும்பத்தினர் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்னதாகவே குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் கோவிட் காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.