கொரோனா நோயாளர் ஒருவர் வீட்டில் சிகிச்சைபெறும் போது வீட்டில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ஹர்ஷ சதீஸ்சந்திர விளக்குகிறார். இதன்படி பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் விடயங்களில் அக்கறை கொள்ள வேண்டும் என்கிறார்.
- Advertisement -
நல்ல ஓய்வில் இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான அறையில் இருத்தல் அவசியம். சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.உங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் 1390 ஐ அழைத்து மருத்துவ ஆலோசனை பெறவும். நிறையத் தண்ணீர் மற்றும் திரவங்களைக் குடிக்கவும்.
- Advertisement -
மற்ற நோய்களுக்கான மருந்துகளை (நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை) தொடர வேண்டும். காய்ச்சல் இருக்குமானால் 2 பரசிட்டமோல் மாத்திரைகளை எடுக்க வேண்டும். வேறு எந்த மாத்திரைகளையும் கொரோனாவுக்காக எடுக்கக் கூடாது.
ஒட்சிசன் தேவையேற்படின் 30 முதல் 40 படிகள் வரை வீட்டில் நடக்கலாம். தொற்றுக்குள்ளானவர் இரவில் நன்கு உறங்க வேண்டும். அது பாதிக்கப்பட்டவரில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.