நாட்டில் மேலும் 118 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 09 -08-2021 , 118 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- Advertisement -
30 முதல் 59 வயது வரையிலான 17 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 101 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் 79 ஆண்களும், 39 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதன்படி, நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 5340 ஆக உயர்வடைந்துள்ளது.