கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொள்ளாத மேல் மாகாணத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் மேல் மாகாணத்தில் கடும் நோயுடன் கூடியவர்களுக்கும் எதிர்வரும் செவ்வாய் கிழமை முதல் மூன்று நாட்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1906 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து மக்கள் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது.