விசுவமடு நகர்பகுதியில் கடந்த 29.07.2021 அன்று இடம்பெற்ற விபத்தின் போது படுகாயமடைந்த 19 வயதுடைய இளைஞன் யாழ் போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (07) உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
விசுவமடு மாணிக்கபுரத்தினை சேர்ந்த(19) சிக்குமார் தனோஜிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 29.07.2021 அன்று உந்துருளியில் பயணித்த போது இளைஞன் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனை தொடர்ந்து இளைஞன் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.