கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததனை தொடர்ந்து பாணந்துறை வைத்தியசாலையின் பிண அறையில் 45 சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கொவிட் சடலங்கள் 22 வரை உள்ளதாகவும் அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
- Advertisement -
பிண அறையின் குளிரூட்டிகளில் திறனுக்கேற்ப சடலங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவற்றை வைப்பதற்கு பிண அறையில் இடமில்லாமையினால் அதற்கு வெளியே வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வைக்கப்பட்டுள்ள சடலங்களில் பெரும்பான்மையான சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.
- Advertisement -
இதன் காரணமாக பிரதேசத்தின் சுடுகாடுகளை 24 மணித்தியாலங்கள் முழுவதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சடலங்களை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார்.