யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 5 மாணவிகளும் 16 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.
- Advertisement -
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இவர்களுக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 5 மாணவிகளும் சேர்ந்து கல்வி கற்றவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.