பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பாடசாலையின் அதிபரான பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹிங்குருகொட பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
ஹிரிதலே சுஜாத என்ற குறித்த பிக்கு எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிக்கு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட சிலர் நீதிமன்ற வளாகத்தில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.