கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் பயணிகள் போக்குவரத்தின் போது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பஸ் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய 11 பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- Advertisement -
பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் போது சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்கத் தவறும் பஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் இன்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
பொதுப் போக்குவரத்தை முன்னெடுப்பது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் நடத்துபவர்கள் வழிகாட்டல்களைப் புறக்கணிப்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் கைதானவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.