யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான ஒட்சிசன் சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்தது.