யாழிலிருந்து கிளிநொச்சி பகுதிக்கு சென்று வாளினால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 13 இளைஞர்களை கிளிநொச்சி நீதிமன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. தென்மராட்சி கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞர்களே அவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
- Advertisement -
கொடிகாமத்தில் இருந்து குறித்த இளைஞர் குழு 06க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சி முழங்காவில் பகுதிக்கு சென்று அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- Advertisement -
இது தொடர்பில் தகவல் அறிந்த முழங்காவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது , சுமார் ஐந்தடி நீளமான கேக் ஒன்று , அதனை வெட்ட பயன்படுத்தப்பட்ட வாள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டன. அத்துடன் பின்புறத்தில் கறுப்பு துணியில் 001 எனவும் கெமி எனவும் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்தன.
யாழில் இயங்கும் ஆவா குழு , 001 எனும் குறியீட்டு இலக்கத்தை பயன்படுத்துவது வழமை என்பதனால் , சந்தேகம் கொண்ட பொலிஸார் அங்கிருந்த 13 இளைஞர்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , கிளிநொச்சி நீதிமன்றில் அவர்களை முற்படுத்தினர். அதனை அடுத்து மன்று அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.