சிறுமி ஹிஷாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை விசாரணைகளில் தீர்க்கமானதாக இருக்கும் என நம்பும் விசாரணையாளர்கள் அந்த அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரியவருகிறது. நேற்று முன் தினம் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் போது சில உடற்பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்விற்காக எடுக்கப்பட்டுள்ளன.
- Advertisement -
இந்த நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையின் பின்னரேயே இறுதியான பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்கு கையளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.