மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி நேற் றைய தினம் பயணிக்க முற்பட்ட 72 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக்கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- Advertisement -
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 52,844 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 72 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
குறித்த சுற்றிவளைப்பு மேலும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் தொடர்பான நடவடிக்கைகள் இன்றும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.