இலங்கையில் கொரோனா வைரஸ் மட்டும் டெல்டா வகை புதிய வைரஸ் தொற்று பரவல் தீவிரம் அடைந்திருப்பதால் அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில், 30 வயதுக்கு கூடிய சகல இலங்கையர்களும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் ஏற்றியிருக்கவேண்டும். அது தொடர்பில் சட்ட ஒழுங்குவிதிகளை தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.