சினோவேக் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்யப்போவதாக ஔடதக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமய தெரிவித்தார். அத்துடன் சினோவேக் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான எந்த இறுதிமுடியும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
- Advertisement -
கோவிட் தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்றைக்கூட செயற்திறனாகக் கட்டுப்படுத்தும் திறன், சினோவேக் தடுப்பூசிக்கு இல்லை என்று தெரிவித்து வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் அவற்றை கொள்வனவு செய்ய இருப்பதாக தென்னிலங்கை பத்திரிகை ஒன்று இன்று தெரிவித்திருந்தது.
- Advertisement -
இந்நிலையில் கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமய அந்த செய்தியை நிராகரித்ததுடம் மேற்கண்டவாறு அவர் கூறினார்.